எச்சரிக்கை

எச்சரிக்கை

Thursday 23 April 2015

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக்
காலம் பலவாய்த் தொடர்ந்த
தொல்லற முறைமை தொகுத்து
அறுவகை வழியாய் வைத்தான்



ஈசனின் தோன்ற லனைய
வீச்சவன் ஞானம் கேளீர்
அறிஞர்கள் பலரை வென்றே
அகத்தினை வென்றான் பாரீர்

காண்பது கேட்பது விடவும்
விசாரம் மேலென வைத்தான்
விவேகம் எதுவெனக் காட்ட
ஞானச் சூடாமணி தந்தான்

















சூனியம் சுற்றிடும் உள்ளம்
சூரியனாய் ஒளிர வாகாய்
உபநிடத உட்பொருள் உரைத்து
உள்ளங்கள் உயரச் செய்தான்

மறைபொருள் மனதில் நிற்க
மந்தணப் பொருள கற்றி
சூட்சும வேதப் பொருளை
விழைவோர் தெளிய விரித்தான்

கிரியெனும் சீடன் தத்தி
என்றவர் வியந்து நோக்க
தோடகர் என்றே ஏத்தி
குருவருள் பெருமை போற்றி






















ஞானியர் சான்றோர் இவரொடு
ஞாலத்தின் சுழல் உணராத
சாமானிய மாந்தர் உய்ய
சாதக வழிகள் வகுத்தான்

காலடி உதித்த சங்கரர்
காலடி ஒட்டியே தத்தம்
காலடி வைப்பவர் வாழ்வு
காலத்தை வெல்வ துறுதி.

- பார்வதேயன்

காலடி சங்கரர் காலடி யொட்டிதம்
காலடி வைப்பவர் குரு.

No comments:

Post a Comment